Thursday, May 22, 2008

கடவுள்னு ஒருத்தர் இருக்கார்....

அமெரிக்கா நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் கோபில் குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் குடும்பம் காரில் சென்று கொண்டு இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில் இவர்களின் மூன்று குழந்தைகளுமே(ஒரு ஆண், இரண்டு பெண்) இறந்து விட்டனர். இவர்கள் மட்டும் இன்றி, இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மனமொடிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றியும், பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான ரிப்பன்களை சாலையோர மரத்திலும் மற்றும் பொது இடங்களிலும் கட்டி இக்குடும்பத்துக்காக பிரார்த்தித்தனர்.




சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, இக்குடும்பத்தினருக்கு குழந்தை வரம் கிடைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த பெண்மணிக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது. இதில் ஒன்று ஆண் மற்ற இரண்டும் பெண்கள். இச்செய்தி ஆச்சர்யமா இல்லை அதிசயமா என்றால், இது ஆச்சர்யமான அதிசயம் என்று தான் நான் சொல்வேன். இச்செய்தியைப் பற்றி முழு விவரம் அறிய, இங்கே சொடுக்கவும்.

http://cbs2.com/local/Coble.Family.Triplets.2.713781.html

No comments: