Wednesday, October 17, 2007

என்ன பொருத்தமடி உனக்கும் எனக்கும்

நீ சைவப் பேர்வழி
நான் அசைவப் பிரியன்
நீ ஒரு அடியை இரு
நொடியில் கடப்பாய்
நான் இரு அடியை ஒரு
நொடியில் கடப்பேன்
உனக்குப் படிப்பு பின்பு
சிறு விளையாட்டு
எனக்கு விளையாட்டு பின்பு
முடிந்தால் சிறு படிப்பு
உனது நட்பு வட்டாரம்
மிக மிக சிறிது
எனது நட்பு வட்டாரமோ
பரந்து விரிந்தது
நீ "கடமையை செய்
பலனை எதிர்பாராதே" பெண்
நானோ சிந்திய வேர்வைக்கு
உரிமைக் கேட்கும் ஆண்
இப்படிப் பல விசயங்களில்
நீ வேறு நான்
வேறாக இருப்பினும்
காந்தத்தின் இரு
வேறு விசைகள்
ஈர்ப்பதைப் போன்றும்
இரு வேறு கைகள்
ஒரு ஒளியினை
எழுப்புவது போலவும்
என்னுடைய இன்னொருப்
பாதி நீயாகவும்
உன்னுடைய இன்னொருப்
பாதி நானாகவும்
இருப்பதே சாலச் சிறப்பு
என்பதை இன்று
உனர்ந்தேனடி என் உயிரே!!!

Tuesday, October 9, 2007

முற்பகல் செய்யின்...

சும்மாங்க..."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" அப்படிங்கிற பழமொழிக்கு இப்ப திடீர்னு அர்த்தம் புரிஞ்சுது. அது தான் அப்படியே இங்க ஒரு பதிவு போடலாம்னு....

ஆது ஒன்னும் இல்லீங்க. நம்ம நேத்து "சமைச்சு" சாப்பிட்டதோட எபெக்ட் இன்னைக்கு வரைக்கும் இருக்குது பாருங்க அது தான்...வேறொன்னும் இல்லை.

திருமணம் எனும் மந்திரம்...




திருமணம்

ஒரு இலக்கல்ல

எட்டிப் பிடிக்க

அது நல்வாழ்விற்கோர்

அகல் விளக்கு

அது என்றும்

அனையாது ஒளிவிட

இருகை சேர்ந்து

ஒளி காக்க வேண்டும்

அதற்கு பெரியோர்கள்

சேர்ந்து நல்வழி

காட்ட வேண்டும்.

நான் இதை கவிதைன்னு சொல்லலை..




தோழி...

எனக்கு நீ

உனக்கு நான்

சிற்சில தருணங்களில்

நண்பர்களாக உதவினோம்

அதை நினைக்கும்போது

சிற்றின்பத்தில் என்

உள்ளம் சிலிர்க்கிறது...



இனி...

வாழ்நாள் முழுதும்

நாம் இருவரும்

தோழனுக்கு தோழியாய்

தோழிக்கு தோழனாய்

வாழ்கின்ற வாழ்வை

நினைத்தால் நெஞ்சில்

பேரின்ப வெள்ளம்

பெருக்கெடுத்து ஒடுதடி!!

Friday, October 5, 2007

கிறுக்கல்!


உன் நெற்றியில் செந்நிறப் பொட்டு

பார்த்து இன்று என் நெஞ்சினில்

முளைத்தது ஒரு காதல் மொட்டு



உன் இரு துறுதுறு கண்களில்

ஒரு சிறு குறுகுறுப் பார்வையில்

உடைந்தது என் உள்ளக் கண்ணாடி


உன் பார்வையை என்மீது பதித்து

உன் நினைவை என் நெஞ்சில் விதைத்து

நெருப்பின்றி என் தேகம் எரித்தாய்


என் ஆண்மையை ஆளுமை செய்யும்

புருவம் எனும் வில்லை வளைத்து

பார்வை எனும் அம்பெய்து எனைக் கொல்!.