Thursday, May 8, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 5

ஒவ்வொரு வீட்டிலேயும் மகாலட்சுமி இருப்பது போல் கிரகலட்சுமியும் இருப்பாள். ஆதலால் வீட்டினுள் குழந்தைகளை "நாசமாகப் போ" என்று யாரும் திட்டக் கூடாது. அவ்வாறு கூறினால் "அப்படியே பலிக்கட்டும்" அப்படின்னு ஆசிர்வாதம் பண்ணிடுவா. அதற்காகத்தான் அந்த காலத்தில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ""நாசமத்துப் போ"என்பார்கள்.அதாவது திட்டும் போது கூட ""நாசமாகப் போகாதே" என்றுதான் ஏசுவார்கள்.

பெண்கள் மூச்சுக் காற்றுக்கு ஆண்களை விட ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக்காற்று எதிர்ல இருக்கிறவங்க மேல படக் கூடாது.அதனாலதான் பெண்கள் மூக்குத்தி அணிகிறார்கள்.

மலைகள்ல எல்லாம் சாமியை வச்சு, மக்கள் மலையேறி பூஜை செய்யனும்கிறதே மக்களின் ஆரோக்கியம் கருதி தான்.ஒவ்வொரு மலை மேலேயும் சுத்தமான மூலிகைக் காற்று இருக்குது. மலை ஏறுறதுனால உடம்புல இருக்கிற கெட்டது எல்லாம் வேர்வையாகவும், ஊளை சதை எல்லாம் கரைஞ்சுப் போகுது. நம் நுரையீரல், நாடி, நரம்பு எல்லாம் வலுவாகுது.

துணுக்குகள் தொடரும்.........

No comments: