Tuesday, November 18, 2008

ப‌த்தாயிர‌ம் ரூபாய் ச‌மோசா!!

வெளிநாட்டின‌ர் ந‌ம் நாட்டுக்கு வ‌ந்தால் அவ‌ர்க‌ளை டூரிஸ்டு கைடுக‌ள், ஆட்டோ டிரைவ‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ர் ஏமாற்றுவ‌தை பார்த்திருப்போம். ஆனால் ஒரு டீக்க‌டைக்கார‌ர் இரு ச‌மோசாவை ட‌ட்ச் நாட்டு சுற்றுலா ப‌ய‌ணிக்கு அது ஒரு மூலிகை ச‌மோசா என்று சொல்லி ப‌த்தாயிர‌ம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இந்த‌ செய்தியை ப‌டிக்க‌ இந்த‌முக‌ப்பை சொடுக்க‌வும்.

எப்ப‌டி எல்லாம் யோசிச்சு ஏமாத்துறாங்க‌ப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, October 31, 2008

ந‌ல்லா வ‌ருது வாயில‌...கெட்ட‌ வார்த்தையா...ந‌ம்ம‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை நினைச்சா

இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.

இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். ``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..

-புஷ்கின்ராஜ்குமார்

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?

சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

- Courtesy : kumudam

Tuesday, October 21, 2008

இந்த‌ நொடியில் உல‌க‌ம்......

இணைய‌ த‌ள‌த்தில் நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த‌ பொழுது ஒரு உருப்ப‌டியான‌ இணைய‌த்தை பார்க்க‌ நேர்ந்த‌து. இந்த‌ இணைய‌த்தில் இந்த‌ நொடியில் உல‌கின் ம‌க்க‌ள்தொகை, காடுக‌ள் அழிக்க‌ப்ப‌டும் அள‌வு, இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளான நில‌க்க‌ரி, எண்ணை உப‌யோக‌ அள‌வு போன்ற‌வை தெரிகின்ற‌து. எய்ட்ஸ், ம‌லேரியா, கேன்ஸ‌ர் போன்ற‌ நோய்க‌ளினால் இற‌க்கும் மக்க‌ளின் விகித‌ம் போன்ற‌வை ம‌னதை வ‌லிக்க‌ச் செய்கிற‌து. இதோ அந்த‌ இணைய‌த்தின் முக‌வ‌ரி உங்க‌ள் பார்வைக்கு...

http://www.worldometers.info/

Friday, October 17, 2008

ஆயிர‌ம் வார்த்தைக‌ளில் சொல்ல‌க் கூடிய‌ அழ‌கை ஒரே வார்த்தையில் சொல்லும் புகைப்ப‌ட‌ம்....

யாரோ ஒருவ‌ரின் திரும‌ண‌ புகைப்ப‌ட‌ம் என் இல்ல‌த் திரும‌ண‌ம் போன்று ஒரு நிறைவைத் த‌ருகிற‌து.உங்க‌ளுக்கும் அவ்வாறே தோன்றும் என்று எண்ணுகிறேன்.

Thursday, October 9, 2008

முருக‌னின் திரு உருவ‌ப் ப‌ட‌ங்க‌ள்

க‌ட‌வுள் முருக‌னின் அபூர்வ‌ப் ப‌ட‌ங்க‌ள் கீழே உள்ள‌ எடுத்துக்காட்டியை சுட்டினால் உங்க‌ள் பார்வைக்கு விருந்து ப‌டைக்கும்.

http://muruganthunai.blogspot.com/

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்

Friday, June 20, 2008

கொலம்பியா விண்கள விபத்து

கொலம்பியா விண்களம் விபத்துக்குள்ளான காரணத்தை நாசா விஞ்ஞானிகள் தற்போது ஒரு புகைப்படத்தின் மூலம் இவ்வுலகிற்கு தெரிய வைத்துள்ளனர். அவ்விண்களத்தில் "மைக்ரோசாப்ட்" மென்பொருள் இருந்தது தான் காரணமாம். :-))


ஒண்ணுமே மாறலை

என் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் அவர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நானும் இன்று செய்து கொண்டு இருக்கிறேன். மேலும் தகவலுக்கு கீழ் உள்ள படத்தைப் பாருங்கள்.



போலீஸாருக்கு புதிய யோகா பயிற்சி

தமிழ்நாட்டுப் போலீஸாருக்கு வில்லிவாக்கத்தில் ஒரு புதிய பயிற்சி அளிக்கப்பட்டது. நாயை மாதிரி முட்டியிட்டு நாக்கை நீட்டி நமது போலீஸார் "புது" யோகா செய்வது மிகவும் அருமையாக உள்ளது அல்லவா?.

Friday, May 23, 2008

காதல் மட்டுமா உலக மொழி?


மக்களே! இது நாள் வரையில் காதல் மட்டும் தான் உலக மொழி, காதல் அனைத்து நாட்டினருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் காதலில் தோல்வியுற்றால், மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சியானதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு சான்று. நம்ம ஊரில் இந்த படத்தில் இருக்கும் தேவதாஸின் நாய்க்குப் பேர் பார்வதி. வெளிநாட்டில் இந்த நாயின் பேர் என்னவாக இருக்கும். உங்கள் பதிலை பின்னூட்டத்தில் இடுங்கள்.

Thursday, May 22, 2008

கடவுள்னு ஒருத்தர் இருக்கார்....

அமெரிக்கா நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் கோபில் குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் குடும்பம் காரில் சென்று கொண்டு இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில் இவர்களின் மூன்று குழந்தைகளுமே(ஒரு ஆண், இரண்டு பெண்) இறந்து விட்டனர். இவர்கள் மட்டும் இன்றி, இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மனமொடிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றியும், பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான ரிப்பன்களை சாலையோர மரத்திலும் மற்றும் பொது இடங்களிலும் கட்டி இக்குடும்பத்துக்காக பிரார்த்தித்தனர்.




சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, இக்குடும்பத்தினருக்கு குழந்தை வரம் கிடைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த பெண்மணிக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது. இதில் ஒன்று ஆண் மற்ற இரண்டும் பெண்கள். இச்செய்தி ஆச்சர்யமா இல்லை அதிசயமா என்றால், இது ஆச்சர்யமான அதிசயம் என்று தான் நான் சொல்வேன். இச்செய்தியைப் பற்றி முழு விவரம் அறிய, இங்கே சொடுக்கவும்.

http://cbs2.com/local/Coble.Family.Triplets.2.713781.html

என்னதான் பெத்த பிள்ளையா இருந்தாலும்....

என்னதான் பெத்த பிள்ளையா இருந்தாலும், இப்படியா தலையிலே வச்சுத் தாங்குவாங்க....ம்...ஓவர் செல்லம் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க..சொல்லிப்புட்டேன் ஆமா.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ??????


சுடுகாட்டில் ஆள் மாறாட்டம்.

பேச்சு வழக்கில் நாம் சுடுகாடுதான் மனிதனுக்கு நிம்மதி தரும் ஒரே இடம் என்று கூறுவதும், அங்கு தான் தில்லுமுல்லுகள் எதுவும் நடக்காது என்று கூறுவதும் வழக்கம். ஆனால் சுடுகாட்டிலும் நடந்த ஆள் மாறாட்டம் பற்றிய பதிவு இது. அமெரிக்க நாட்டில், ஒஹையோ(ohio) மாகாணத்தில், தன் தாயின் அருகில் தான் தானும் புதைக்கப்பட வேண்டும் என்ற ஆசையுடன் சுடுகாட்டில் இடம் வாங்கினார் திரு.டேவிட் எல்.பிங்கம் என்பவர். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் சுடுகாட்டுக்குச் சென்று பார்க்கையில் தன் தாயின் அருகில் வேறொரு டேவிட் எல்.பிங்கம் புதைக்கப்பட்டு இருந்தார்.




தாய் இறப்பதற்கு முன்பு, டேவிட்டும் அவரது தாயும் விளையாட்டாக, இருவரும் இறந்தால் அருகருகில் புதைக்கப்பட்டு இரு கல்லறையின் நடுவில் ஒரு குழாய் வைத்து இறந்த பின்னும் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று பேசிக் கொள்வார்களாம். அதற்காகவே தன் தாயின் கல்லறையின் அருகில் இடம் வாங்கிய டேவிட்டுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்து இருக்கும். ம்....கலிகாலம்.

Wednesday, May 21, 2008

கணிப்பொறியாளர் ஒருவரின் ப்ளாக்கில் இருந்து......

கைநிறைய சம்பளம், நினைச்சா வெளிநாட்டுப்பயணம், குளு குளு அலுவலகம், நுனிநாக்கு ஆங்கிலம், சொகுசான வாழ்க்கை... இதுதான் ஐ.டி. துறை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை கசப்பானது. ஐ.டி. துறையால் நம் நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நாம் அதற்குக் கொடுத்த விலை சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. ஐ.டி. நுழைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சமூகமாற்றங்களே. அதிலும் சிதைந்துவரும் குடும்ப உறவுகள், அதிகரித்துவரும் விவாகரத்துகள், அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள், சிதைந்து வரும் தனிநபர் வாழ்க்கை, வேலைநிரந்தரமின்மை, அந்நிய வாழ்க்கைமுறைகளான 'லிவிங் டுகெதர்', 'டிஸ்கொதே,' நுகர்வு கலாசாரம், குடி மற்றும் 'வீக் எண்ட்' கொண்டாட்டங்கள். அதில், போதைப் பொருட்களை உபயோகிப்பது ஆகியவை தற்பொழுது அதிகமாகியிருக்கிறது.

குடும்ப உறவுகளின் சிதைவுக்குக் காரணம், தம்பதிகள் சந்திக்கும் நேரம் மிகக்குறைவு - புரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு. மற்றொரு காரணம் இருவருக்கும் இடையே ஏற்படும் நானா, நீயா மனப்பான்மை. ஊடகங்கள் பெண்ணுரிமையைத் தவறான வடிவில் பெண்களுக்குக் கற்பித்தது, பெற்றோர்களும் அறியாமை காரணமாக, 'சின்னஞ்சிறுசுங்க தனியா இருக்கட்டும்' என்று, புதிதாகத் திருமணமானவர்களை அருகிலிருந்து நெறிப்படுத்தத் தவறுகின்றனர். அவர்கள் அதை உணர்ந்து சரிசெய்ய முயலும்போது காலம் கடந்துவிடுகிறது.



அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள் ஏற்படக் காரணம், பெரும்பாலும் நம் பிரச்னைகளுக்கு செவிசாய்க்க வீட்டில் உள்ளவர்களுக்கு நேரமின்மை, சக அலுவலர்கள் காட்டும் சிறு பரிவு, இரவு நேரப் பணி, கண்டுகொள்ளவும் கண் காணிக்கவும் யாரும் இல்லாதது போன்றவை. கண்காணிப்பு இல்லாததால் அலுவலகத்திலேயே சிலர் தவறான உறவு கொள்கின்றனர்.

ஐ.டி. துறையில் தனிமனித வாழ்க்கைக்கு மரியாதையே இல்லை. அலுவலக வேலை காரணமாகப் போகத் தவறிய நண்பர்களின் திருமணங்கள், குடும்ப துக்கங்கள், இழந்த சந்தோஷங்கள் என்று எந்த ஒரு ஐ.டி-யாளனிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். தொழிலாளிகளுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறை அவ்வளவு நாட்கள் விடுமுறை என்று கம்பெனிகள் சொன்னாலும், அதை சுலபமாக எடுக்க விட மாட்டார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என் நண்பன் பெற்றோரை சந்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தெலுங்குப் புத்தாண்டுக்கு ஊருக்குப் போகவேண்டும், பெற்றோர்களோடு கழிக்கவேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்று வருகிறான். முடியவில்லை. காரணம் வேலைப்பளு. இதெல்லாம் சிறு சிறு உதாரணங்களே. தனி மனித வாழ்க்கை சிதைவதால் பணியில் கவனப்பிசகு ஏற்படு வதுடன் மன அழுத்தமும் ஏற்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் சமீப காலப் பிரச்னை பணி நிரந்தரமின்மை. ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விலக்கலாம். காரணம் தேவையில்லை. ஊழியனின்

performance சரியில்லை என்பார்கள். வேலையை விட்டுத் தூக்கினால் கேட்க வலுவான சட்டங்களோ, நாதியோ இங்கு இல்லை. கோடி கோடியாக இந்த சமுதாயத்துக்கும் அரசுக்கும் எங்களால் வருவாய் இருந்தாலும், எங்களுக்கென்று பணி பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை. என் நண்பனின் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், கணினியில் அவனுடைய பயோடேட்டா இருந்த காரணத்தால் (வேறு வேலைக்கு விண்ணப்பிக்க முயல்கிறான் என்று) அவனை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டனர். சமீபத்தில் ஒரு கம்பெனியில் ஒரு வருடம் முதல் 10, -15 வருடங்களாக வேலை செய்தவர்களைக் கும்பல் கும்பலாக வேலையைவிட்டுத் தூக்கினார்கள். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் முன்னர் வேலை செய்ததாகக் கூறிய கம்பெனி பொய்யானது என்று அவர்கள் கண்டுபிடித்தது. ஏன், இவர்களை வேலைக்குச் சேர்க்கும்போது இதையெல்லாம் சரி பார்த்துத்தானே வேலைக்கு எடுத்தார்கள்? கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரியிறைக்கும் அரசு, எங்களையும் கண்டுகொள்ள வேண்டும்.

குடி, வார இறுதிக் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஐ.டி. துறையில் உள்ளவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. இந்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். பெரும்பாலான ஐ.டி-யாளர்கள் வேலை காரணமாக வெளி ஊர், வெளி மாநிலங்களில் வாழ்பவர்கள். 20, -22 வயது வாலிபனுக்கு மாதம் 15, -20 ஆயிரம் கையில் வரும்பொழுது என்ன செய்வது என்று தெரிவதில்லை. அவனுக்கு வழிகாட்ட சமூகமோ பெற்றோர்களோ சக ஊழியர்களோ முயல்வதில்லை. மாறாக, சமூகம் அவனை ஒரு நுகர்வாளனாக மாற்ற முற்படுகிறது. அலுவலகமோ அவனை அந்நிய நாட்டில் மணிக்கு இவ்வளவு என்று விலை பேசுவதுடன் தன் கடமையை முடித்துக்கொள்கிறது. பெற்றோர்கள், 'இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ சம்பாதிக்கிறான். அடுத்து வெளிநாடு வேற போகப்போறான்' என்கிற ஆனந்த களிப்பிலேயே அவனைக் கண்காணிக்கும் கடமையை மறந்துவிடுகிறார்கள். கை நிறையக் காசு, கட்டற்ற சுதந்திரம்... இது போதாதா இந்த வயதில் தடம் மாறிப்போக?

சமூகம் தன் போக்கை மாற்றிக் கொண்டு எங்களைப் போன்ற தொழி லாளர்கள் மீது நிஜமான அக்கறை செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

- ஆனந்த விகடனில் இந்த வாரம் வெளிவந்தது.

Friday, May 16, 2008

தூய தமிழில் கணிப்பொறி கலைச்சொற்கள் - 2

என் கணினி ஆசிரியர் என்னை கடைபுகு-கடைவிடு நெறிமுறையில் ஒரு நிரலும், கடைபுகு-முதல்விடு நெறிமுறையில் ஒரு நிரலும் எழுதச் சொன்னார்.
என் மடிக் கணிப்பொறியில் பெரும் பரப்பு வலையமைப்பு சரியாக வேலை செய்யவில்லை.
நான் என் அலுவலகத்தில் பயன்பாடு ஆய்வாளராக உள்ளேன்.



my computer teacher asked me to write two programs one using last-in-last-out and the other using last-in-first-out
algorithms.
My laptop's WLAN is not working properly.
I am working as application analyst in my company.

Thursday, May 15, 2008

தூய தமிழில் கணிப்பொறி கலைச்சொற்கள்.

நன்பர்களே! கீழே உள்ள வாக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயருங்கள் பார்க்கலாம்.

நான் எழுதிய பணி யல்பிலா முடிவுற்றது.
நான் இன்று ஒப்பு-லக்க-மாற்றி வடம் வாங்கப் போகிறேன்.
முற்காலத்தில் மக்கள் கணக்குப் போடுவதற்கு மணிச்சட்டம் உபயோகித்தனர்.
நிரல் முறிந்தது.
உங்கள் நிரல் ஏற்புச் சோதனை செய்யப்படும்.

விடை கீழே!!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
The job I wrote abended.
I am going to buy analog to digital cable today.
those days, people used abacus for Mathematics.
program abended.
your program will undergo acceptance testing.

ஸ்...அப்பா கண்ணைக் கட்டுதே!!!!!

தொடரும்....

Friday, May 9, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 7

கோயிலில் கொடி மரம் எங்கு உள்ளதோ அங்கு தான் நாம் விழுந்து நமஸ்காரம் செய்யனும். வேறு எங்கேயும் விழுந்து வணங்கக் கூடாது. சாமிக்கும் சாமியோட வாகனத்துக்கும் இடையிலே நம்ம போகக் கூடாது.

ஆண்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியும், பெண்கள் தங்கள் கைகளை தன் நெஞ்சுக்கு நேராகவும் கூப்பி சாமியை வணங்க வேண்டும்.

பிள்ளையார் சன்னதியில் ஆண்கள் மட்டுமே தோப்புக்கரணம் போடணும். பெண்கள் தலையில் இருபுறமும் குட்டிக் கொண்டால் போதுமானது.

"இடம்" என்பது அமங்கள வார்த்தை. அதனால் தான் சாமி வருவதை சாமி "வலம் வருது" என்போம்.

நாம் பிறந்த உடனே மொட்டை அடிப்பது எதுக்கென்றால், நாம் நம் தாயின் கருவில் இருக்கும் போது தாயின் உடலில் உள்ள இரத்தம், மலம், சிறுநீர் எல்லாம் நம் உடலில் ஊறி இருக்கும். அவையாவும் நம் மயிர்களின் மூலமாக சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறுவது தலையில் தங்கி விடக் கூடாது என்றால் நாம் மொட்டை அடிக்க வேண்டும்.

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 6

மார்கழி மாசம் விடியற்காலையில் பனியிலே எழுந்து ஒவ்வொரு தெருவாக பஜனை பாட்டு பாடிட்டுப் போறவங்களை பார்த்திருப்போம். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. மார்கழி மாசம் தான் நமக்கு ஆரோக்கியம் குடுக்கிற ஓசோன் அதிகமா அதிகாலை நேரத்தில இருக்கும். அதை சுவாசிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது.

மார்கழி மாசம் ஏன் கோலம் போட்டு, கோலத்தில பூ வைக்கிறாங்கன்னா, அந்த காலத்தில எந்த வீட்டுல வயசுப் பயனோ வயசுப் பெண்ணோ இருக்காங்களோ அவுங்க வீட்டுல தான் இந்த மாதிரி கோலத்தில பூ வைப்பாங்க. காலையில வீதி வீதீயா பஜனை பாடிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி கல்யானத்தை முடிச்சிடுவாங்க.

சாப்பிடும்போது நம்ம தண்ணி குடிச்சா நிறைய சாப்பிட முடியாதுங்கிற நினைப்பு தப்பு. ஒரு நெல் இருக்கிற பாத்திரத்தில தண்ணி ஊத்தினா நெல் எல்லாம் எப்படி சுருங்கி பாத்திரத்தில கொஞ்சம் இடம் வருதோ, அதே மாதிரி தான் சாப்பிட்டு தண்ணி குடிச்சாலும் வயிற்றுல கொஞ்சம் இடம் வரும்.

வீட்டுல யாகம் வளர்க்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது. வீட்டுக்குள்ளே இருக்கிற தீய காற்று தீய கிருமி எல்லாம் வெளியேறிடும். பசும் நெய்யிலே எரிகிற விளக்கு நம்ம சுற்றுப்புறத்தை ரொம்ப சுத்தமாக வைத்திருக்கும்.

பசு சாண விரட்டிச் சாம்பல் எவ்வளவோ இயற்கை வைத்தியம் இருக்குது. தொடைகளுக்கு நடுவில் ஸ்கின் பங்கஸ் என்னும் கிருமி இருக்கும். அதுல இந்த சாம்பல் தடவினா, மூணே நாள்ல ஸ்கின் பங்கஸ் இருந்த இடம் தெரியாம போயிடும். உடம்புல வர்ற புண்களுக்குக் கூட நம்ம இந்த சாம்பலை தடவலாம்.


துணுக்குகள் தொடரும்.......

Thursday, May 8, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 5

ஒவ்வொரு வீட்டிலேயும் மகாலட்சுமி இருப்பது போல் கிரகலட்சுமியும் இருப்பாள். ஆதலால் வீட்டினுள் குழந்தைகளை "நாசமாகப் போ" என்று யாரும் திட்டக் கூடாது. அவ்வாறு கூறினால் "அப்படியே பலிக்கட்டும்" அப்படின்னு ஆசிர்வாதம் பண்ணிடுவா. அதற்காகத்தான் அந்த காலத்தில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ""நாசமத்துப் போ"என்பார்கள்.அதாவது திட்டும் போது கூட ""நாசமாகப் போகாதே" என்றுதான் ஏசுவார்கள்.

பெண்கள் மூச்சுக் காற்றுக்கு ஆண்களை விட ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக்காற்று எதிர்ல இருக்கிறவங்க மேல படக் கூடாது.அதனாலதான் பெண்கள் மூக்குத்தி அணிகிறார்கள்.

மலைகள்ல எல்லாம் சாமியை வச்சு, மக்கள் மலையேறி பூஜை செய்யனும்கிறதே மக்களின் ஆரோக்கியம் கருதி தான்.ஒவ்வொரு மலை மேலேயும் சுத்தமான மூலிகைக் காற்று இருக்குது. மலை ஏறுறதுனால உடம்புல இருக்கிற கெட்டது எல்லாம் வேர்வையாகவும், ஊளை சதை எல்லாம் கரைஞ்சுப் போகுது. நம் நுரையீரல், நாடி, நரம்பு எல்லாம் வலுவாகுது.

துணுக்குகள் தொடரும்.........

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 4

வீட்டு வைத்தியம் பற்றி பட்டாபி குறிப்பிடுகையில், ஜலதோஷத்திற்கு மிகச் சிறந்த மருந்து, நாட்டு வைத்தியக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை வேர். இந்த வேரை வாயில் போட்டு, உருவாகும் உமிழ் நீரை முழுங்கி வந்தால் ஜலதோஷம் சரியாகும் என்றார். ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால், சித்தரத்தை வேருடன் சிறிது பனங்கல்கண்டு கலந்து காய வைத்து கசாயமாக அருந்தலாம்.சித்தரத்தை வேரைப் போலவே அதிமதுர வேரையும் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

புராணத்தின்படி, விரதத்திலேயே சிறந்த விரதம் உண்ணும் உணவை பழிக்காமல் இருப்பதும், வீணாக்காமலும் இருப்பதும் தான். திருவள்ளுவர் தான் சாப்பிட அமரும்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஊசியும் எடுத்துக்கொண்டு தான் அமர்வாராம். ஏன் என்றால் ஏதாவது பருக்கை கீழே சிந்தினாலும், அதை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி உண்பார்.

தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் தான்.மஹாபாரதத்தில் கர்ணன் அனைத்து தர்மங்களும் செய்து இருக்கிறார். ஆனால் செய்யாத ஒரே தானம் அன்னதானம் தான். அன்னதானம் செய்வதற்காகவே மறுபடியும் சிறுதொண்டநாயனாராக பிறந்தார் என சிறுதொண்டநாயனார் கதையில் உள்ளது.

துணுக்குகள் தொடரும்......

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 3

நம்ம இந்த காலத்துல டிரெட்மில் என்னும் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம். அதனால பெரிய பிரயோஜனம் எதுவும் கிடையாது. அந்த காலத்தில் விடியற்காலத்தில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது எதற்கு என்றால் ஒவ்வொரு இரவும் குளத்து ஆற்று நீரிற்கு ஒரு சக்தி இருக்கும். அது சூரிய உதயத்தின் பிறகு குறைந்து விடும். அது மட்டும் இன்றி குளித்தவுடன் கோயிலுக்குச் செல்வது அதிகாலையின் தூய்மையான காற்ரை சுவாசிக்க உதவுகிறது.

சாப்பிடும்பொழுது நம் ஐம்புலன்களின் கவனமும் நமது உணவின் மீதே இருக்க வேண்டும். பேசவோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ பார்க்கக் கூடாது.அவ்வாறு இருப்பதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சக்தி நம் உடம்பில் ஒட்டாது. வியாதி வரும். வாழை இலையில் சாப்பிடுவதனால் ஆரோக்கியமாக இருக்கலாம் மற்றும் இள நரையையும் தடுக்கலாம். அதுப்போல கறிவேப்பிலை துவையலை வாரம் ஒருமுறை சாப்பிட்டாலும் நரை வருவதை தடுக்கலாம். கீரை வகைகளை சாப்பாட்டில் சேர்ப்பதனால் கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்.

அன்று நம் பெரியவர்கள், வடை சுடும் போதோ, அப்பளம் பொறிக்கும் போதோ அளவாக எண்ணை உபயோகிப்பார்கள். மிச்சமாகும் எண்ணையை அன்றே மற்ற பண்டங்களுக்கு உபயோகித்து விடுவார்கள். ஏன் என்றால், எண்ணையை மறுபடியும் சூடு செய்தால் அது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால் தான். இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.

துணுக்குகள் தொடரும்.......

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 2

* நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். இன்றைய விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது. அதுவும் கண்டிப்பாக ஐஸ் தண்ணீர் குடிக்கக் கூடாது. நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது வெளியில் இருக்கும் காற்றழுத்தம், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை வீட்டில் இருப்பதைவிட மாறி இருக்கும். ஆதலால் நாம் வீட்டுக்குள் நுழைந்தவுடன் நமது உடல் சிறிது நேரம் சென்ற பின்னே தான் சகஜ நிலை அடையும். அதன் பின்பு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* கருவில் இருக்கும் குழந்தை எந்தெந்த வாரங்களில் எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பதை இன்று நாம் ஸ்கேனிங் முறையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அன்று நம் மார்க்கண்டேய புராணம் என்னும் நூலிலேயே இதைப் பற்றி மிக விரிவாக உள்ளது. அம்மா வயிற்றில் உள்ளக் குழந்தை முதல் வாரத்தில் வட்டமாக நுரை வடிவில் இருக்கும். இரண்டாம் வாரத்தில் எழந்தைப் பழம் போன்றும், அதன்பிறகு மாமிசப்பிண்டம் மாதிரியும் இருக்கும்.
முதல் மாத முடிவில் தலையும், இரண்டாவது மாதத்தில் கை-கால்களும், மூன்றாவது மாதத்தில் நகம், முடி, எழும்பு, தோல், ஆண்-பெண் என்ற அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை ஆகியவை உருவாகும்.
நான்காவது மாதத்தில் தோல், இரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் அப்படிங்கிற ஏழு தாதுக்கள் உருவாகும். ஐந்தாவது மாதத்தில் பசி, தாகம் உண்டாகும்.
ஆறாவது மாதத்தில் தாயின் கர்ப்பப்பையில் சுற்றப்பட்டு வயிற்றின் வலப்பக்கம் சுழலும்.
ஏழாவது மாதத்தில் அந்த ஜீவனுக்கு ஞானம் பிறக்கும். போன ஜென்மங்களுடைய நினைவு, இப்பப் பிறக்க வேண்டிய காரணம், தொடர்பு எல்லாம் புரிகிறது. தொப்புள்கொடி வளர்ச்சி அடைந்து அதன் மூலமாக சிசு உணவருந்தும்.அதற்கு அறிவு உண்டாகி ரெண்டு கையையும் கூப்பின மாதிரி வைத்து சாமியிடம் ப்ரார்த்திக்கும். பின்பு பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கும்.

இந்த அறிய விசயங்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் வியாச பகவான்.


துணுக்குகள் தொடரும்.......

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 1

நானும் ரொம்ப நாளாக ஏதாவது உருப்படியாக எழுதணும்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சது தான் மிச்சம். ஏதோ தட்டுத் தடுமாறி கடைசியில ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்னாடி "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" அப்படிங்கிற தலைப்புல பட்டாபின்னு ஒருத்தர் ஒரு அருமையான தொடர் எழுதி இருந்தாரு. இந்த தொடர்ல நம்ம வீட்டுப் பெரியவங்க சொல்லுற சின்ன சின்ன விசயத்திலும் எவ்வளவு உள் அர்த்தங்கள் இருக்குதுன்னு ரொம்ப அழகாக எழுதி இருந்தாரு. நான் அந்தத் தொடர்ல இருந்த முக்கியமான சில துணுக்குகளை இந்தப் பதிவுகளில் பதிய விரும்பி இதோ என் முதல் பதிவு.

* வீட்டுக்குள் நுழைந்தவுடன் காலைக் கழுவுவது என்பது எதற்காக என்றால் நாம் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வரும்போது நம் கால்களில் ஏராளமான கிருமிகள் ஒட்டி இருக்கும். இக்கிருமிகள் நம் நகக் கண்கள் மூலமாக உடலில் புகுந்து வியாதியை உண்டாக்கும். இது போல சப்பிடுவதுக்கு முன்னும் பின்னும் கால் கழுவுவது ஜீரன உறுப்புகளை பலப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

* இன்றைய நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்றான அணுவைப் பற்றி நம் கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்லும்போது அவன் ஹிரன்யசகிபு என்பவனைப் பற்றி கூறுவதாக ஒரு குறிப்பு உள்ளது. ஹிரன்யசகிபு தன் மகனான பிரகலாதனிடம் "எங்கே இருக்கிறான் உன் இறைவன்?." என்று கேட்கும்போது, அதற்கு பிரகலாதன், "சாணிலும் உளன். ஓரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!" என்றான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், அணுவைப் பிளந்து அழிவிற்கோ எரிவாயுவுக்கோ பயன்படுத்தும் இன்றைய விஞ்ஞானம் பற்றி இந்த வரி கூறுவது தான்.அதாவது அணுவைப் பிளந்து ஒரு பகுதிக்கு "கோண்" என்று தமிழ் பெயர் அன்றே நிலுவையில் உள்ளது.


துணுக்குகள் தொடரும்.................