Friday, October 5, 2007

கிறுக்கல்!


உன் நெற்றியில் செந்நிறப் பொட்டு

பார்த்து இன்று என் நெஞ்சினில்

முளைத்தது ஒரு காதல் மொட்டு



உன் இரு துறுதுறு கண்களில்

ஒரு சிறு குறுகுறுப் பார்வையில்

உடைந்தது என் உள்ளக் கண்ணாடி


உன் பார்வையை என்மீது பதித்து

உன் நினைவை என் நெஞ்சில் விதைத்து

நெருப்பின்றி என் தேகம் எரித்தாய்


என் ஆண்மையை ஆளுமை செய்யும்

புருவம் எனும் வில்லை வளைத்து

பார்வை எனும் அம்பெய்து எனைக் கொல்!.


No comments: