Thursday, August 16, 2007

என் இனிய கணி(ன்)ணி நீ !!!!!

நான்கு சுவர்கள்...
நடுவில் நான்
எனது கைகள்
உன்னை தீண்டியதும்
பிரகாசமாய் நீ
சூரிய உதயம் முதல்
சூரிய அஸ்தமனம் வரை
உன் மடியில் நான்
இருந்தும் வாழ்க்கை
அலுக்கவில்லை
கேட்பவை எல்லாம்
அமுத சுரபி போல்
முகம் கோணாமல்
கொடுத்தாய்
என் வாழ்வின் ஒரு
பகுதிதான் உனக்கு கொடுத்தேன்
நீ எனக்கு வாழ்க்கையே
கொடுத்தாய்
என் இனிய கணி(ன்)ணி நீ !!!!!

No comments: