Tuesday, November 20, 2007

மெய்யாலுமா....

குழந்தைகளுக்கு 300 எலும்புகளும் பெரியவர்களுக்கு 206 எலும்புகளும் இருக்குமாம். மனிதன் வளரும்போது 94 எலும்புகள் கரைந்து விடுமாம்.
உலகத்திலேயே மிகவும் கொடிய விலங்கு கொசுதானாம். அதன் நோய் பரப்பும் திறன் வேறு எந்த விலங்கிற்கும் கிடையாதாம்.
கொசுவுக்கு 47 பற்கள் உள்ளனவாம்.
யானை ஒரு நாளைக்கு 2 மணி நேரமே உறங்குகிறது.
லாப்ஸ்டருக்கு ரத்தம் நீல நிறமாம்.
வரிக்குதிரை வெள்ளைக்கலரில் கறுப்பு வரிகள் கொண்டவை.
உலகிலேயே பெரிய முட்டை சுறாமீனின் முட்டை.
முதலையின் நாக்கு மேல்வாயில் ஒட்டி இருக்கும்.
ஒட்டகசிவிங்கியினால் இரும முடியாது.
சுறாமீனுக்கு கேன்ஸர் வராது.
ஒட்டகத்துக்கு முதுகெலும்பு நேரானதாக இருக்கும்.
சிறுத்தை 0 km/hr ல் இருந்து 70 km/hr செல்ல மூன்றே நொடிகள் தான் ஆகுமாம்.
கரப்பான்பூச்சி தலை இல்லாமல் பல வாரங்கள் வாழுமாம்.
எறும்புகள் உறங்குவதில்லை.
ஒவ்வொரு மனிதனின் தலையிலும் சுமார் ஒரு லட்சம் முடிகள் உள்ளன. ஒவ்வொரு முடியும் சுமார் 12.7cm நீளம் ஒரு வருடத்திற்கு வளருமாம்.
எலிகள் தான் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் உயிரினம். இரண்டு எலிகள் அது போடும் குட்டிகள் என 18 மாதங்களில் 1 மில்லியன் வாரிசுகளை உருவாக்க முடியுமாம்.
பாம்புகள் தான் பக்கா "carnivorous" குடும்பத்தை சேர்ந்தது. ஏன் என்றால் அது மட்டும் தான் எவ்வகையான செடிகொடிகளையும் உண்ணாது.
விஷதன்மை இல்லாத பாம்புகள் மட்டுமே உள்ள ஒரே இடம் அமெரிக்காவில் உள்ள மெயின் மாகாணம்.
நீலத்திமிங்களங்கள் 188 டெசிபள் அலைவரிசையில் ஒலி எழுப்பும். இதுவே உயிருள்ளவை எழுப்பும் மிக அதிகமான ஒலி அதிர்வாகும். இது 530 மைல் தொலைவில் இருந்து உணர முடியுமாம்.
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள பாய்சன் ஏரோ வகை தவளைகளே உலகில் மிகவும் கொடிய விஷதன்மை உடைய உயிரினமாம்.
நாம் ஒரு வருடத்திற்கு சுமார் 42,00,000 தடவை கண் சிமிட்டுவோம்.
1979ல் அமெரிக்காவின் முதல் விண்வெளி அரங்கம் (space station) ஆயிரமாயிரம் துகள்களாக உடைந்து கடலுக்குள் உடைந்து விழுந்து விட்டது.

No comments: